வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு!

50
50

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்கா முன்பாக இன்று காலை பேரணியாக சென்ற வேலையற்ற பட்டதாரிகள், மணிக்கூடு கோபுரம் ஊடாக சென்று மீண்டும் காந்திபூங்காவினை வந்தடைந்து, அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

பொதுத்தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க கோரியும் பட்டதாரிகள் நியமன வயதெல்லையினை 35க்கு மேல் உயர்த்துமாறு கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரிவினைகள் இல்லாமலும் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகைகளிலும் நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.