கொழும்பில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல்

4 1
4 1

கொழும்பில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர்

ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

மாணவர்களை கலைக்க போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் காயமடைந்த மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது