மனித புதைகுழி : தகாத வார்த்தைப் பிரயோகம் சட்டதரணிகள் எதிர்ப்பு

1 mannar court
1 mannar court

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின்போது அரச சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அவர்கள் குழு சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தகாத வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்தியதாகவும் கூறபடுகின்றது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகளும், மன்னார் சட்டத்தரணிகளும் குறித்த அரச சட்டத்தரணிக்கு எதிராகவும் குறித்த வார்தை பிரயோகத்திற்கு மன்னிப்பு கோருமாறும் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து வெளியேறினர்.

அதன் பின்னர் குறித்த வார்தை பிரயோககத்திற்கு அரச தரப்பு சட்டத்தரணி மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மீண்டும் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.