தன்னைத்தானே தாங்கியவர் மரணம்

1 dddsw
1 dddsw

கொழும்பு – தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்பாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற குடும்பத் சண்டையை அடுத்து, கூரிய ஆயுதம் ஒன்றினால் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த நபரை மீட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர், எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.