நீதிமன்றில் முன்னிலையான ரஞ்சன்!

1 q
1 q

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் நாள் மாதிவெலயிலுள்ள அவரது இல்லத்தில் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்தனர்.

இந்த நிலையில், கடந்த 29ஆம் நாள் ரஞ்சனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.