ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நள்ளிரவுடன் நாடாளுமன்றை கலைத்து வர்த்தமானியை வெளியிட்டார். இதனால் 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்தனர்.
ஜனாதிபதி 19 ஆவது திருத்தத்தில் உள்ள தனது அதிகாரத்தின்படி நான்கரை வருடங்கள் முடிந்த பின்னர் நாடாளுமன்றைக் எவ்வேளையிலும் கலைக்க முடியும். இதன்படி அவர் நள்ளிரவு நாடாளுமன்றைக் கலைக்கும் வர்த்தமானியை வெளியிட்டார்.
இதனால், முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவான 62 பேர் ஓய்வூதியக் கொடுப்பனவை இழந்தனர்.