யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் உள்ள தொடர் அடுக்கு மாடி கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பிரதான வீதியில் இருந்து குறித்த கட்டடத்திற்குள் நுழைந்த சிற்றுந்து ஒன்றில் மோதுண்டே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.