வவுனியாவில் வாளுடன் இருவர் கைது!

images 1 2
images 1 2

வுனியா வேப்பங்குளம் பகுதியில் விஷேட அதிரடி படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது இருவர் வாளுடன் கைது செய்யப்பட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை 4 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் விஷேட அதிரடி படையினர் மேற்கொண்ட விஷேட ரோந்து நடவடிக்கையின் போது வாளுடன் நடந்து சென்ற 24, 26 வயதுடைய இளைஞர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.