எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இறுதி செய்வதற்காக தமிழரசு கட்சி நாளை மறுதினம் கொழும்பில் கூடுகிறது.
கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா சம்பந்தன் மற்றும் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தேர்தல் மாவட்டங்கள் தோறும் உள்ள கட்சியின் கிளைகள் தத்தமது பகுதியில் யாரெல்லாம் வேட்பாளராக போட்டியிட தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்ற பட்டியலை வேட்பாளர் நியமன குழுவுக்கு அனுப்பியுள்ளன. அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் நியமித்த 12 பேர் கொண்ட வேட்பாளர் நியமன குழு தலைவர்கள் முன்னிலையில் இறுதி பட்டியலை இறுதிசெய்யவுள்ளது.
அன்றைய தினம் தமிழரசுக்கட்சியின் சகல வேட்பாளர்களும் பெயர் விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .