ஜனாதிபதி ஆணைக்குழுவில் 6 மணிநேர சாட்சியம் வழங்கிய சஜித்

Sajith 2
Sajith 2

வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இன்று காலை 9.40 மணியளவில்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சுமார் 4 மணி நேரமும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சுமார் இரு மணி நேரமும் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இதன் போது தேசிய வீடமைப்பு அதிகார சபையில் 2300 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கியமை சட்டத்துக்கு முரணானதாக நான் கருதவில்லை இந்த ஊழியர்களை நியமிக்கும் போது தேசிய வீடமைப்பு அதிகார சபை சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றியுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட அனைவரும் வீட்டுத்திட்டங்களை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டங்கள் வெற்றிபெற இந்த ஊழியர்கள் திறமையாக பணியாற்றியுள்ளனர் என இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ சாட்சியமளித்துள்ளார்.