சாவகச்சேரியில் சடலம் மீட்பு!

body 696x435 300x188
body 696x435 300x188

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றிலிருந்து இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அதே இடத்தைச் சேர்ந்த 55 வயதுடைய வல்லிபுரம் திருச்செல்வம் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

பணி நிமித்தம் நேற்றுக் காலை சென்ற அந்த நபர் இரவு வரை வீடு திரும்பாததை அடுத்தே மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களை அடுத்தே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.