கொரோனா பாதிப்பு தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

3 ages
3 ages

கோவிட் – 19 தொற்றுநோயின் நிலைமை மற்றும் அதனைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கினார்.

வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கு போதுமான தடுப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார்.ஊடகங்களின் வகிபாகத்தைப் பாராட்டிய அதே வேளையில், தேவையற்ற முறையில் அச்சத்தை ஏற்படுத்தாமல், வைரஸின் ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்கும் அதே நேரத்தில், பொது மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.