வர்த்தகர்களுக்கு உடனடி தீர்வு

q
q

கொரோனா வைரசின் காரணமாக சீனாவில் இருந்து மூலப்பொருட்கள் பெறுவதில் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வர்த்தகர்களுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலகம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிப் பொருள் தயாரிப்பிற்கு பெரும்பாலான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

தற்பொழுது இடம்பெற்றுவரும் கொரோனாவின் காரணமாக எமது தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி இந்த ஏற்பாட்டை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.