மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணிப் பகிஸ்கரிப்பு; நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு

l1
l1

முல்லைதீவு நீராவியடி பகுதியில் நேற்று சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டத்தினை மீறி செயற்பட்டதைக் கண்டித்தும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே.நாராயணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள் பலர் கலந்துகொண்டனர்.

இன்று காலை மட்டக்களப்பு நீதின்றங்கள் அனைத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபடும் சட்டத்தரணிகள் இன்று காலை தொடக்கம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

முல்லைதீவு நீராவியடியில் நீதிமன்ற கட்டளையினையும் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த சட்டத்தரணிகள் அச்சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.