கவிந்திரன் கோடிஸ்வரன் வெல்லமாட்டார் -இந்திரகுமார் பிரசன்னா

gf
gf

தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முடியாமல் பேரம்பேசும் சக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்து வருவதற்கு காரண கர்த்தா முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான இந்திரகுமார் பிரசன்னா குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக நாடாளுமன்ற தேர்தலில் பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் நிலவி வரும் பனிப்போர் குறித்து சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதாக கூறப்படும் கவிந்திரன் கோடிஸ்வரன் என்பவர் வெல்வதற்கு சாத்தியமில்லை.இது எமது கட்சிக்கும் மக்களுக்கும் செய்த துரோகத்தின் பரிசு ஆகும்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் அடிக்கடி குளறுபடி செய்யும் ஒரு நபராகவே இவர் வலம் வருவது வேதனையாக உள்ளது.

இவரது அண்மைக்கால செயற்பாடு ஒரு குடும்பத்திலுள்ள தம்பியுடைய மனைவியை கவர்ந்து மணமுடிப்பதற்கு ஒப்பானது ஆகும்.

தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்த கோடீஸ்வரனை இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் பட்டியலில் ஈர்த்துள்ளமை தமிழரசு கட்சிக்குள்ளும் குளறுபடியை தோற்றுவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .