3 தினங்களில் நாட்டில் 5 பேருக்கு கோரோனா தொற்று

re
re

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் மூன்று பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர்களில் ஒருவர் ஜேர்மனியிலிருந்து வருகை தந்தவர் என்றும் மற்றைய இருவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தாலியிலிருந்து வருகை தந்தவர்கள் இருவரும் மட்டக்களப்பு கோரோனா தடுப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதன்மூலம் கடந்த 3 தினங்களில் நாட்டில் 5 பேருக்கு கோரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.