வவுனியாவில் திடீரென கொரோனா பரிசோதனை மையம்!

90
90

வவுனியா- பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு இன்று மாலை 7 மணியளவில் விமான பயணிகள் பலர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு நிலையங்களில் தடுத்து வைத்து தனிமைப்படுத்தல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முற்பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பேருந்துகளில் 265 விமானப் பயணிகள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் கண்காணிப்பு சோதனைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.