இலங்கையில் நாளை அரச – வர்த்தக – வங்கி விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக முற்பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓர் அம்சமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மாகாண, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கமைவாக மாகாண, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.