தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் இடமுண்டு!

1oad 2
1oad 2

இலங்கையில் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி அவரச நிலைமை ஏற்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே விடுத்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்று மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஊடாகப் பொதுத் தேர்தலைப் பிற்போட முடியும் என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.