எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று 24ம் திகதி வரையிலும் ஆறுபேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
- கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா
- சிறிபால அமரசிங்க
- அஜந்த வீரசிங்க பெரேரா
- அப்பருக்கே புஞ்ஞானந்த தேரர்
- சமந்த பிரசன்ன பெரேரா
- நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷ