இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 29 ஆக அதிகரிப்பு!

2 es
2 es

உலகத்தை அச்சுறுத்திவரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்டு வருகின்ற உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் வெளியாகிய அறிக்கையின் அடிப்படையில், நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டதாக உறுதிப்படுத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதுடன், நோய்க்கான அறிகுறிகளுடன் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது.