கொரோனா தொற்று – சிறையில் கலவரம் மூன்றுபேர் சுட்டுக்கொலை

2 fdd
2 fdd

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் இருவர் கொரோணா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாமென கருதப்பட்டு, நேற்று அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கைதிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

தமக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமென்றும், தம்மை வேறிடத்திற்கு மாற்றுமாறும் குறிப்பிட்டு கைதிகள் போராட்டம் நடத்தினர்.

அநுராதபுரத்தில் கைதிகள் மேற்கொண்ட கலவரத்தை அடக்க முடியாமல் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இது குறித்து உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

போராட்டம் தீவிரமடைந்து, சிறைக்கூண்டுகளை உடைத்துக் கொண்டு வெளியேறி கூரைகளில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, சிறைக்காவலர்கள் அங்கு தங்கி நிற்க முடியாமல் வெளியேறியதாகவும், இதைத் தொடர்ந்து இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் . இதன்போது, இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சில கைதிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.