தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்தில்லை – டக்ளஸ் தேவானந்தா

5 we
5 we

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற பெரும் களேபரத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“அநராதபுரம் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களை அடுத்து அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகளுடன் உடனடியாக தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தேன்.

அதன் பிரகாரம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும், அவர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி உள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” – என்றார்.