ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

railway
railway

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு சம்பள முரண்பாடுகள், கடந்த அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு இன்றும்(27.09.2019) தொடர்கிறது

ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் நேற்றைய தினம் 12 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.