முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அக்கட்சியின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போய் 8 வருடங்கள் கடந்தநிலையில் அவர்களை வெளிப்படுத்த வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் இச்செயற்பாட்டாளர்கள் காணாமல்போயிருந்தார்கள்.
இது தொடர்பிலான வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. இதில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதும் பாதுகாப்பினை காரணம்காட்டி அவர் முன்னிலையாகவில்லை.
எனவே வழக்கில் முன்னிலையாகி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதற்கு முன்னதாக யாழ் பொதுநூலகத்தில் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதில் குமார் குணரட்ணம் கலந்துகொண்டார்.