விடுவிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று!

2 f
2 f

இலங்கையில் கொரோனா தொற்று அச்சம் அதிகரித்து செல்லும் நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வதிவிடங்களுக்கு சென்றோர் மேலும் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இதே வேளை இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பி, வெட்டிமராஜபுரா- பேருவளையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட 30 வயது நபரொருவருக்கு ஆறு நாட்களின் பின்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.