தென் கொரியாவில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் நிபுணர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த Daegu நகரிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதில் நோயாளிகளுக்கு நோய் பரவியதல்ல எனவும் அவர்களுக்குள் இருந்த வைரஸ் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கலாம் என தென்கொரிய நிபுணர்கள் குழு கணித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களில் கண்டறிய முடியாத அளவில் செயலற்றதாக மறைந்திருக்க வாய்ப்புண்டு எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இன்னொரு நிபுணர் தென் கொரிய நிபுணர்களின் கருத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், அந்த 51 நோயாளிகளும் நோய் குணமடைந்ததாக கண்டறியப்பட்ட மாதிரிகளில் பிழை நேர்ந்திருக்கலாம் என்கிறார்.