கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆறாவது நபரின் தகவல்கள் !

image 0fecb66013
image 0fecb66013

நாட்டியில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்றைய (7) நாள் உயிரிழந்த ஆறாவது நபர் தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் தெஹிவளை – அருனாலோக்க மாவத்தையை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தகவல்கள் கூறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 27ஆம் நாள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் மார்ச் மாதம் 30ஆம் நாள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தமைமை கண்டறியப்பட்டது.

குறித்த நபரின் மகளின் கணவர் ஒரு சுற்றுலா வழிக்காட்டி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பேரன் ஆகியோரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடல் தகனம் செய்யும் நடவடிக்கை நேற்று (7) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாவால் பலியான் ஆறு பேரில் நான்கு பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.