இலங்கையில் தற்பொழுது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் 33 பேர் தங்கள் வதிவிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என இராணு ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
குறித்த நபர்கள் நாளை (9) திகதி வதிவிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரும் இன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து அனுப்பிவைக்கப்படமாட்டார்கள் என்பதோடு இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 3415 பேர் வதிவிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன் 1262 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இவர்களில் 44 பேர் இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் என இராணுவ ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.