கொரோனா பரவலை தடுப்பதற்கு மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இன்று (8) அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் (18) நாள் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கடந்த (15) நாள் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பின்னர் இடம்பெற்ற பரிசோதனையில் அவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.