இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளி மரணம் என்பது தவறான செய்தி

4 oad
4 oad

நேற்றும் இன்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படும் முன்னாள் போராளியின் மரணம் என்பது மிக தவறான செய்தி என நமது ஊடகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சுவிஸில் உயிரிழந்துள்ளார் என முகநூல் வழியாக செய்தி பரப்பப்பட்டுள்ளது

இறந்தவர் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியைச் சேர்ந்த த.கஜேந்தினி (வயது-35) என்பவரே என்றும்

சுவிஸ் நாட்டில் செங்காலன் என்ற மாவட்டத்தில் வசித்து வந்த இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது இரு கால்களையும் இழந்திருந்தார் என்றும், தவறுதலாக செய்தி பரப்பப்பட்டுள்ளது .

இதனை சில நம்பகமான செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் வெளியிட்டமையால் மிகவும் பரபரப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது .

தற்போது அந்த விடயமும் செய்தியும் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது .