புத்தாண்டு விழாக்களை நடத்த தடை

4 rr 1
4 rr 1

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, புத்தாண்டு விழாக்களை நடத்தவோ அல்லது மக்களை ஒன்று கூட்டுவதையோ தவிர்க்குமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறவினர்களுடன் வரையறுத்துக்கொள்ளுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், கிராமப்புறங்களில் புத்தாண்டு விழாக்களை நடத்த சிலர் தயாராவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 


எனவே, கிராமப்புறங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்