கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியில் அமைந்துள்ள எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்குள் தவறி விழுந்த அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் எண்ணெய் களஞ்சிய தரப்பரிசோதனை செய்பவராக கடமையாற்றி வந்துள்ளார்.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்