அடுத்த வாரம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி

7 min
7 min

குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர் நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் அடுத்த வாரம் முதல் குழந்தைகளை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாகான தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார செய்யலாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், குழந்தைகள் மற்றும் எதிர்பார்க்கும் தாய்மார்களின் வீடுகளுக்கு திரிபோஷா மற்றும் பிற ஊட்டச்சத்து பொருட்களை விநியோகிக்க ஒரு திட்டம் சுகாதாரத் துறை ஊழியர்களினால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் 072 280 95 77 க்கு அணுகலாம் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.