இன்று மாலை 4 மணி முதல் சித்திரை 20ஆம் திகதி வரை 19 மாவட்டங்களிலும் ஊரடங்கு!

download 9 2
download 9 2

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு ஆபத்தான வலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளுக்கு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுல்படுத்தப்படும். இன்று மாலை 4 மணி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20ஆம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்ப்படும் ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.