அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று வியாழக்கிழமை 4 மணிநேரம் தொடர் விசாரணை நடத்தியது.
மன்னாரில் ஒரு வீட்டுத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீன் நேற்றுக் காலை 10.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு சென்ற அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.