பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இடைநிறுத்தம்

campus
campus

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கடந்த சில நாட்களாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்க மேற்கொண்ட தீர்மானத்தை
இடைநிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க குழுவின் இணைத் தலைவர் தம்மிக எஸ்.பிரியந்த ”சம்பள முரண்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதினால் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.