நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒரே நபர் கோத்தாபய ராஜபக்சதான் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் .
பெந்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அதனை கோட்டாபய ராஜ பக்சவினால் மாத்திரமே செய்ய முடியும்.
எனினும், ஒரு தரப்பினர் தற்போது அவரையிட்டு அச்சம டைந்துள்ளனர். சஜித் பிரேமதாஸ அச்சமடைந்துள்ள அளவுக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன எனவும் பஸில் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.