லொறி – மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கே.கே.எஸ். வீதி மல் லாகம் சந்திக்கு அருகா மையில் நேற்று மாலை 6.30 ‘மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் அளவெட்டி வடக் கைச் சேர்ந்த செளந்தர்ராஜன் விதுசன் (வயது-19) என்ற இளைஞனே உயிரிழந்தார் என்று தெல் லிப்பளை வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி விபத்து இடம்பெற்றது.
விபத்தில் இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலிருந்தவர்களால் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார் என்று தெல்லிப்பளை வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித் தன.