CIRDAP இன் நிருவாகக் குழுக் கூட்டம்

01 5 1
01 5 1

ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மையத்தினுடைய (CIRDAP) நிருவாகக் குழுக் கூட்டம் விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

அமைச்சின் செயலாளர் ருவான் சந்திர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உத்தியோக பூர்வமாக நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இந்தோனேசியா நாட்டின் எந்திரம் மற்றும் பொதுச்சேவைகள் உதவி அமைச்சர் கலாநிதி யுஷார்டோ ஹன்டோயுங்கோ(Dr.Yusharto Huntoyungo), விவசாய தொழில் நுட்பம் மேலதிக செயலாளர் கலாநிதி அஜந்த டீ சில்வா, விவசாய சீர்திருத்தத்தின் துணை செயலாளர் திருமதி.எமிலி ஓ. பாடிலா (Mrs.Emily O.Padilla) மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் பதினைந்து நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.