இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஓமர் அப்துல் ரசாக் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் Oct.7இல் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறைகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையயாடப்பட்டதனைத் தொடர்ந்து இருவர்களது சந்திப்பினை நினைவுபடுத்தும் முகமாக இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இச்சந்திப்பின் போது மாலைதீவு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் இஷ்மைல் நசீர் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் தூதுவர் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.