2ஆம் தவணைப் பரீட்சை தொடர்பில் வெளியாகிய தகவல்!!

8 vv
8 vv

இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் 2ஆம் தவணைப் பரீட்சைகளுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுற்றுநிருபத்திலேயே குறித்தவிடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை ஜீலை 06 தொடக்கம் செப்டம்பர் 04 வரை நடைபெறும் என்றும் மூன்றாம் தவணை அக்டோபர் 5 முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என்றும் குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.