காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

FF618029 0E0A 48CD 842C C0DC22F597EE
FF618029 0E0A 48CD 842C C0DC22F597EE

வவுனியா கோவில் குளம் பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி சுகந்தபிரகாஸ் என்பவரை நேற்றைய தினத்தில் இருந்து காணவில்லை என உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் கோவில் குளத்தில் இருந்து ஓமந்தை சென்ற குறித்த சாரதி காணாமல் போயிருந்தார். குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் வவுனியா கள்ளிக் குளம் காட்டுப்பகுதியில் தீயில் எரிந்த நிலையில் குறித்த சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்துக்கு அருகில் அவரது முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.