எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

elpitiya
elpitiya

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் சுமார் 75 சதவீதமானவர்கள் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை இரவு 10.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.