ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கும்! – ஜனாதிபதி ஊடக பிரிவு

curfew colombo
curfew colombo

தற்போது அமுலில் உள்ள நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சினால் மீள அறிவிக்கும் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் அறிவித்தல் வரை வரையில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாதென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பிட்டுள்ளது.