இலங்கை கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கே அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் கப்பல் பணியாளர்களான வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும் செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் இவ்வாறு வந்தவர்கள் பலரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.