ஹப்புத்தளை – ஹிதல்கஸ்ஹின்ன பகுதியில் உள்ள குன்று ஒன்றில் இருந்து சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குன்றில் உச்சியில் இருந்து வீழ்ந்த நிலையில் அவரது சடலம் மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில் நேற்றிரவு (27) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இதல்கஸ்ஹின்ன பகுதியை சேர்ந்த (40) வயதுடைய இவர் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவரின் உயிரிழப்பிற்கான காரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் ஹப்புத்தளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.