வளிமண்டலவியல் திணைக்களத்தின் செய்தி!

00000
00000

நாட்டில் எதிர்வரும் (36) மணித்தியாலங்களில் மேல்,சப்ரகமுவ,மத்திய,வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊவா,கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.