பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள்!

Mahinda Amaraweera 850x460 acf cropped
Mahinda Amaraweera 850x460 acf cropped

நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய காலகட்டத்தில் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதனையடுத்து குறித்த புகார்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், அவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பிலும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் (05) பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த குழுவின் அறிக்கையானது அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்குழுவின் அறிக்கையானது நாளைய (06) தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.