நாட்டின் பிலியந்தலை – கெஸ்பேவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலையின் பின்புறத்தில் காயத்துடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது கெஸ்பேவ பகுதியை சேர்ந்த (50) வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொலை செய்யப்பட்டவரின் மனைவி காயங்களுடன் மீட்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படத நிலையில் பிலியந்தலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.